சரியாக காலை 7.51க்கு சனிப்பெயர்ச்சி எனும்போது, 7.30க்கே கோயிலுக்குள் வந்தார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால்சிங். இதற்காக 7.05 மணி முதல் 8.10 மணி வரை பக்தர்கள் தரிசனம் தடைபடுத்தப்பட்டது. கோயிலுக்கு வந்த ஆளுநருக்கு பாதுகாப்பு அளிக்கவே கோயிலுக்குள்ளேயும், வெளியேயும் பாதுபாப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் திரளாக ஆளுநரை சூழ்ந்துகொண்டனர். அப்போது அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் யாரையும் கண்டுகொள்ளாமல் தள்ளமுள்ளு ஏற்படும் வகையில் போலீஸார் நடவடிக்கை இருந்தது. மேலும் பாதுகாப்புக்கு இருக்க வேண்டிய போலீஸாரோ, சுவாமி தரிசனம் செய்வதிலும், செல்போனில் படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டியதால், பக்தர்கள் வரிசையில் தரிசனம் செய்யமுடியாமல் சுமார் 1 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. போலீஸாரின் படமெடுக்கும் செயல்பாட்டால், உலகம் முழுவதும் பல்வேறு தொலைக்காட்சி மூலம் நேரடி ஒலிபரப்பை காணும் மக்களுக்கு செய்தி சேனல்களின் சேவையில் குளறுபடி ஏற்பட்டது.