புவனேஸ்வரம், ஜன.9: ஒரிசாவின் ராயகடா மாவட்டத்தில் மலை மற்றும் அடர்ந்த காட்டுப்பகுதியில் போலீசாருடன் நிகழ்ந்த என்கவுன்ட்டரில் 9 மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனர்.
காஷிப்பூர்-கல்யான்சிங்பூர் எல்லைப்பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது. மாவோயிஸ்டுகள் அப்பகுதியில் இருப்பதாக வந்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்தியதாக டிஜிபி மன்மோகன் பிரஹராஜ் தெரிவித்தார்.
இந்த சோதனையின்போது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது. பின்னர் துப்பாக்கிச்சூட்டில் பலியான 9 மாவோயிஸ்டுகளின் உடல்களும், சில ஆயுதங்களும், வெடிபொருள்களும் அப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக டிஜிபி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.