சுமார் 4 பைபர் படகுகள் ஒன்றுக்கொண்டு மோதிக்கொண்டதில் படகு உள்வாங்கியுள்ளது. இதனை கடலுக்கு எடுத்துச்சென்றால் தண்ணீரில் ஊறிப்போய், ஓட்டை விழுந்து தண்ணீர் படகுகள் புகுந்துவிடுமென மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் படகில் பாதுகாப்பாக வைத்திருந்த வலைகளும் தூக்கி வீசப்பட்டதுபோன்று வேறு இடத்தில் கிடந்தது. படகின் விலை ரூ.1.20 லட்சம் என்றும், பாதிப்புக்குள்ளான படகுகளை மீண்டும் கடலுக்குள் எடு்த்துச் செல்ல இயலாது. மீனவர்களுக்கு புதுவை அரசு உதவி செய்யவேண்டும். இதுகுறித்து மீன்வளத்துறையிடம் புகார் தெரிவிக்கவுள்ளோம் என்றனர் காரைக்கால்மேடு மீனவர்கள்.