தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஜான் பாண்டியன் காவலில் இருந்து விடுவிப்பு

திருநெல்வேலி, செப்.13: தூத்துக்குடி அருகே வல்லநாடு துப்பாக்கி சுடும் பயிற்சி  மையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மக்கள் முன்னேற்றத் தலைவர் ஜான் பாண்டியன் இன்று காலை 6.30 மணி அளவில

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:23 am

தருண் விஜய்

திருநெல்வேலி, செப்.13: தூத்துக்குடி அருகே வல்லநாடு துப்பாக்கி சுடும் பயிற்சி  மையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மக்கள் முன்னேற்றத் தலைவர் ஜான் பாண்டியன் இன்று காலை 6.30 மணி அளவில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் திருநெல்வேலிக்குத் திரும்பினார்.

முன்னதாக, பரமக்குடியில் இமானுவல் சேகரன் நினைவு நாளை ஒட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் பரமக்குடி செல்ல முயன்றார். ஆனால், பரமக்குடியில் பள்ளி மாணவன் ஒருவன் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் காரணமாக, அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. வெளி நபர்கள், அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் பரமக்குடி பகுதியில் வர தடை இருந்த காரணத்தால், அவரை அங்கே செல்ல வேண்டாம் என போலீஸார் கூறினர். அவர் மறுக்கவே போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி, வல்லநாடு துப்பாக்கிச் சுடும் தளத்தில் தடுப்புக் காவலில் வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.