காரைக்காலில் வீட்டினுள் துறைமுக ஊழியர் சாவு
காரைக்கால், ஏப். 6 : காரைக்காலில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று தங்கிய துறைமுக ஊழியர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்ப


காரைக்கால், ஏப். 6 : காரைக்காலில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று தங்கிய துறைமுக ஊழியர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவது : புதுச்சேரி சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் பலராமன் மகன் ஸ்ரீதர் (50). இவர் காரைக்கால் துறைமுகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். காரைக்காலில் உள்ள பாரதி நகர் முதல் குறுக்குத் தெருவில் வீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
வியாழக்கிழமை மாலை பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவர் வெள்ளிக்கிழமை பணிக்கு புறப்படாதது குறித்து, அவருடன் பணிபுரிவோர் வீட்டுக் கதவை தட்டியுள்ளனர். உள் பக்கமாக தாழி்ட்ட நிலையில், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதவை திறந்து போலீஸார் சென்று பார்த்தனர். அசைவின்றி கிடந்த அவரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக அவருடன் பணியாற்றியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...