டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சின்னம்பேடு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி,ஏப்.12: கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னம்பேடு பகுதியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த சிற

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:35 pm

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி,ஏப்.12: கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னம்பேடு பகுதியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுவரம்பேடு என்று அழைக்கப்படும் சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. குசநாபர் என்ற முனிவரால் ஆராதிக்கப்பட்டு, லவ-குசராலும், வால்மீகி முனிவராலும் போற்றி வணங்கப்பட்ட பெருமைக்குரிய இந்த ஆலயத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்த ஆலயத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மற்றும் சுற்றுச் சந்நிதிகள் விமான நூதன ராஜ கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை திருவாராதனம், பகவதனுக்ஞை, புண்யாஹம், ஹோமம் உட்பட பல்வேறு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றன. புதன்கிழமை கலசஸ்நபனம், மகாசாந்தி கும்பதிருமஞ்சனம் உட்பட பல்வேறு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

மகா கும்பாபிஷேக தினமான வியாழக்கிழமை காலை யாத்ரா தானம் நிகழ்வும், கும்ப புறப்பாடு நிகழ்வும், அதனைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேக நிகழ்வும் நடைபெற்றது. இதில் ஆலய குருக்கள் பிரபாகரன், சபரி, நடராஜன் ஆகியோர் பொன்னேரி எம்.எல்.ஏ பொன்.ராஜா முன்னிலையில் ஆலயத்தின் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள்.

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பிறகு ஸ்ரீ பெருமாள் நாச்சியார் திருக்கல்யாணமும், தொடர்ந்து  திருவீதி புறப்பாடும் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாக அலுவலர் து.வள்ளுவன், கிராம முக்கியஸ்தர்கள் உட்பட பலர் முன்னின்று நடத்தினார்கள். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சின்னம்பேடு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவிலுக்கு வந்து வரதராஜப் பெருமானை தரிசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.