ஈரோடு அருகே வில்வரசம்பட்டியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 48). நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் இன்று பிற்பகல் பெருந்துறை சாலையில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய காரில் கதவைத் திறந்துகொண்டு அமர்ந்தார். அப்போது டூவீலர் வண்டியில் வந்த மர்ம நபர் ஒருவர், பெருந்துறைக்குச் செல்வதற்கு வழி என்ன என்று கேட்டார். அவருக்கு பதில் சொல்வதற்காக தன் ஓட்டுநர் பக்கம் திரும்பி வழி தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் காருக்குள் கை விட்டு பணத்தை பறித்துக் கொண்டு அந்த நபர் டூ வீலரில் வேகமாகச் சென்று மறைந்தார்.