6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுரை கிரானைட் குவாரி சோதனை: பி.ஆர்.பி. நிறுவன கட்டுமானம் அகற்றம்

மேலூர், ஆக.3: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டு வரும் கிரானைட் குவாரிகளில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலூர் கீழவளவு பகுதியில் மேற்கொள்ளப் பட்ட

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:34 am

தர்மராஜ்

மேலூர், ஆக.3: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டு வரும் கிரானைட் குவாரிகளில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலூர் கீழவளவு பகுதியில் மேற்கொள்ளப் பட்ட சோதனைகளில் பி.ஆர்.பி நிறுவனம் ஆக்கிரமித்திருந்த 2 1/4 ஏக்கர் பரப்பளவிலான பணிமனை ஷெட் அப்புறப்படுத்தப்பட்டது.

கீழவளவில் உள்ள பிள்ளையார்குளம் ஊரணியில் தமிழ்நாடு அரசு நிறுவனமான டாமின் நிறுவனம் கனிமங்களைத் தோண்டி எடுக்க பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு காண்ட்ராக்ட் கொடுத்திருந்தது. இந்நிலையில், பி.ஆர்.பி. காண்ட்ராக்ட் எடுத்திருந்த இடத்தில் இருந்து டாமின் நிறுவனத்துக்குத் தெரியாமல் ஏமாற்றி கிரானைட் கற்களை முறைகேடாக எடுத்ததும் தெரியவந்துள்ளது. இதை அடுத்து, இவர்கள் அமைத்திருந்த ஷெட்கள், 2 நாட்களாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டு, அனைத்து கட்டுமானங்களும் அப்புறப்படுத்தப் பட்டன. இந்த சோதனை மேலும் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.