கீழவளவில் உள்ள பிள்ளையார்குளம் ஊரணியில் தமிழ்நாடு அரசு நிறுவனமான டாமின் நிறுவனம் கனிமங்களைத் தோண்டி எடுக்க பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு காண்ட்ராக்ட் கொடுத்திருந்தது. இந்நிலையில், பி.ஆர்.பி. காண்ட்ராக்ட் எடுத்திருந்த இடத்தில் இருந்து டாமின் நிறுவனத்துக்குத் தெரியாமல் ஏமாற்றி கிரானைட் கற்களை முறைகேடாக எடுத்ததும் தெரியவந்துள்ளது. இதை அடுத்து, இவர்கள் அமைத்திருந்த ஷெட்கள், 2 நாட்களாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டு, அனைத்து கட்டுமானங்களும் அப்புறப்படுத்தப் பட்டன. இந்த சோதனை மேலும் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.