திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

விருதுநகரில் பஸ்-வேன் மோதல்: 3 பேர் பலி

விருதுநகர்: விருதுநகர் புறவழிச் சாலையில் பஸ்ஸுடன் வேன் ஒன்று மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டியைச் சேர்ந்த 12 பேர் சென்னையில் உறவினர் ஒருவரின் நிகழ்ச்சிக்

Updated On :26 செப்டம்பர் 2012, 5:43 am

விருதுநகர்: விருதுநகர் புறவழிச் சாலையில் பஸ்ஸுடன் வேன் ஒன்று மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டியைச் சேர்ந்த 12 பேர் சென்னையில் உறவினர் ஒருவரின் நிகழ்ச்சிக்காகச் சென்றுவிட்டு, ஏஸ் வேனில் தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த வேன் விருதுநகரில், மதுரை - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே வந்தது. அப்போது, மதுரையில் இருந்து நெல்லை செல்லும் அரசுப் பேருந்து பயணிகளை சாலையோரம் இறக்கிவிட்டபடி நின்றது. அதனருகே வந்தபோது வேனின் டயர் திடீரென வெடித்ததில் வேன் நிலை தடுமாறி பஸ்ஸின் பின்பக்கம் மோதியது. இதி,  வேனில் பயணித்த வெங்கடேசன்(35), முத்துலிங்கம்(65), சரஸ்வதி(55) ஆகிய மூவரும்  சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் சிலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.