ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம்(AITUC)சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம்(AITUC)சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிற்சங்க தலைவரை பழிவாங்கும் நோக்குடன் செயல்படும் கிளை மேலாளரை கண்டத்தும், தொழிற்சங்க பாகுபாடு பார்த்து தொழிலாளியை வண்டி இறக்கம் செய்வதைக் கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மினிபஸ் இயக்கத்தை கட்டுப்படுத்தி அரசு பஸ்கள் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு தலைவர் வி.சோழபாண்டியன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தி.ராமசாமி, மாவட்ட துணைச் செயலாளர் வெ.அழகிரிசாமி, வி.பொன்னுப்பாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...