போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம்(AITUC)சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2012, 12:24 pm

கோ.ஜெயக்குமார்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம்(AITUC)சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிற்சங்க தலைவரை பழிவாங்கும் நோக்குடன் செயல்படும் கிளை மேலாளரை கண்டத்தும், தொழிற்சங்க பாகுபாடு பார்த்து தொழிலாளியை வண்டி இறக்கம் செய்வதைக் கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மினிபஸ் இயக்கத்தை கட்டுப்படுத்தி அரசு பஸ்கள் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு தலைவர் வி.சோழபாண்டியன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தி.ராமசாமி, மாவட்ட துணைச் செயலாளர் வெ.அழகிரிசாமி, வி.பொன்னுப்பாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.