போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஹெல்மட் அணிந்து வந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை ஹெல்மட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றார். போலீஸார் தப்பி ஓடிய நபரை தேடி வருகிறார்கள்.

News image
Updated On :13 டிசம்பர் 2012, 5:12 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை ஹெல்மட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றார். போலீஸார் தப்பி ஓடிய நபரை தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஊரணிபட்டி தெருவைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி நாச்சியார் (70). இவர் வியாழக்கிழமை காலை ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் கைகாட்டி கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்து வந்த நபர் நாச்சியாரை ஒட்டி மோட்டார் சைக்கிளில் வந்து, அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து நாச்சியார், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏ.மகேந்திரபாண்டியன் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.