/

மூதாட்டியிடம் நகை பறிப்பு: ஒருவரிடம் விசாரணை

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற வழக்கில் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :16 டிசம்பர் 2012, 6:21 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற வழக்கில் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி, காக்கிவாடான்பட்டியைச் சேர்ந்தவர் மன்னார்சாமி மனைவி சீதாலட்சுமி (72). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆடிப்பூர உற்சவத்தின் 5 கெருட சேவையைப் பார்க்க 19.7.12-ம் தேதி வந்திருந்தார்.

ஸ்ரீஆண்டாள்கோயில் தெற்கு மாட வீதி வழியே நடந்து சென்று கொண்டிருந்த போது, இவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை யாரோ பறித்துச் சென்று விட்டார்களாம். இது குறித்து நகர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சீதாலட்சுமி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மதுரையைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.