சிதம்பரத்தில் வியாழக்கிழமை காலை மணல் டிராக்டர் மோதிய விபத்தில் சைக்கிளில் பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
சிதம்பரம் ராஜாநகரைச் சேர்ந்த சித்தார்த்தன். சிங்கப்பூரில் பணியாற்றும் இவரது மகன் மணிகண்டன் (14) தாயாருடன் வசித்து வருகிறார். தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் இம்மாணவர் வியாழக்கிழமை காலை சைக்கிளில் சீர்காழி மெயின்ரோட்டில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது விபீஷணபுரம் எனுமிடத்தில் பின்புறமாக சிதம்பரம் நோக்கி வந்த மணல் டிராக்டர் ஒன்று மோதிய விபத்தில் டிரெய்லர் சக்கரத்தில் சிக்கி மாணவர் மணிகண்டன் இறந்தார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

