அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் அருகே லாரி விபத்து : 3 பேர் பலி

விருதுநகர் அருகே லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார்.

Updated On :31 டிசம்பர் 2012, 5:08 am

விருதுநகர் அருகே லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார்.

திருநெல்வேலி மகேந்திரகிரியில் உள்ள காற்றாலைக்கு உதிரிப் பாகங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று காரியப்பாட்டி அருகே வந்த போது பழுதாகி நின்றது. அந்த லாரியில், காற்றாலைக்குத் தேவையான மிகப்பெரிய இறக்கைகள் உள்ளிட்டவை இருந்தன.

கரூரில் இருந்து வெள்ளைக் கற்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று அவ்வழியே வந்தது. அப்போது, நின்றிருந்த லாரியை கடக்க முயன்ற போது, அந்த லாரியில் இருந்த இறக்கைகள் இடித்து விபத்துக்குள்ளானது. இதில், கற்களை ஏற்றி வந்த லாரியின் கிளீனர் உட்பட 3 பேர் பலியானார்கள். லாரி ஓட்டுநர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.