மானாமதுரை, ஜூலை 6 : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அரசு பஸ் மோதி பைக்கில் வந்த கணவன், மனைவி இறந்தனர். மதுரை கூடல்நகர் புதூரைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி சகாயஅருள் (40). இவரது மனைவி சகாய லூர்து ஜெயபீவி(36) இருவரும் மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள இருதய ஆண்டவர் ஆலயத்தில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் சிறப்பு திருப்பலி பூஜையில் கலந்து கொள்வதற்காக பைக்கில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். செம்பராயனேந்தல் என்ற இடத்தில் வந்தபோது ராமேஸ்வரத்திலிருந்து பெங்களூர் சென்ற அரசு விரைவு பஸ் இந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில் வேளாங்கண்ணி சகாய அருள், மனைவி சகாய லூர்து ஜெயபீவி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த விபத்து குறித்து திருப்பாசேத்தி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேற்கண்ட இருவரது உடல்களும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

