6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இறந்தவரை எடுத்துச் செல்வதில் தகராறு: ஒருவர் கொலை

மேலூர், ஜூன் 15: மதுரை மாவட்டம் கொங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் அழகர்சாமி(வயது 26) இவர்கள் பகுதியில் வசித்துவந்த பூசார் என்ற நபர் நேற்று மதியம் இறந்துவி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:13 am

தர்மராஜ்

மேலூர், ஜூன் 15: மதுரை மாவட்டம் கொங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் அழகர்சாமி(வயது 26) இவர்கள் பகுதியில் வசித்துவந்த பூசார் என்ற நபர் நேற்று மதியம் இறந்துவிட்டார். இவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்ற நிலையில், பூசாரியின் உடலை எடுத்துச் செல்ல முனைகையில் அந்தப் பாதை தொடர்பாக அழகர்சாமிக்கும் கணேசனுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறியது. இதில் கணேசன் அழகர் சாமியைத் தாக்கினாராம். பதிலுக்கு அழகர்சாமியும் கணேசனைத் தாக்கியுள்ளார். கல்லை எடுத்து தலையில் அடித்துள்ளார் அதில், கணேசன் பலத்த காயமடைந்து இறந்துவிட்டார்.

இதுகுறித்து கணேசனின் மனைவி இந்திரா கீழவளவு போலீஸில் புகார் அளித்தார். இதை அடுத்து போலீஸார் கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.