தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெருந்துறை அருகே ஆலப்புழை ரயிலில் தீவிபத்து; 5 மணி நேரம் தாமதம்

ஈரோடு, ஜூன் 28: ஈரோடு அருகே பெருந்துறை ரயில் நிலையத்துக்கு வரும்போது, சென்னை - ஆலப்புழை ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது. பெருந்துறைக்கு சற்று முன்னர் ரயில் வரும்போது இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்தத் தீ ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:27 am

ஜபலின் ஜான்

ஈரோடு, ஜூன் 28: ஈரோடு அருகே பெருந்துறை ரயில் நிலையத்துக்கு வரும்போது, சென்னை - ஆலப்புழை ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது.

பெருந்துறைக்கு சற்று முன்னர் ரயில் வரும்போது இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்தத் தீ பற்றியிருக்கக் கூடும் என்று தெரிகிறது. ரயிலின் சரக்குப் பெட்டியில் தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. இதனை கவனித்த நபர் ஒருவர் ரயில் ரயில் கார்டுக்கு தகவல் அளித்துள்ளார்.  ரயில் கார்டு, உடனடியாக பெருந்துறை ரயில்வே நிலையத்துக்கு தகவல் அளித்தார். ஈரோடு, பெருந்துறை, பவானி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பெட்டி முழுவதுமாக எரிந்து சேதமானது. இந்த விபத்தில் பயணிகள் பெட்டிகள் உடனடியாக கழற்றிவிடப்பட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை .

பின்னர் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு 5 மணி நேர தாமதத்துக்குப் பிறகு ரயில் ஆலப்புழை புறப்பட்டுச் சென்றது.

மேலும், இந்த விபத்தால், சென்னை மற்றும் வடக்கில் இருந்து ஈரோடு வழியாக கோவை மற்றும் கேரளம் செல்லும் ரயில்கள் அனைத்தும் 2 மணி நேரம் தாமதமாகச் சென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.