திருச்சி, மார்ச் 7: மாசி மகம் மற்றும் தனது பிறந்த தினத்தை ஒட்டி, திருச்சி திருவரங்கம் அரங்கநாதப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனத்துக்காகவும் சிறப்பு அர்ச்சனைக்காகவும் முதல்வர் ஜெயலலிதா திருவரங்கம் வந்தார்.
மாலை 5.20 மணி அளவில் கோயிலுக்கு வந்த அவருக்கு பாரம்பரிய முறைப்படி பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ரங்கா ரங்கா கோபுர வாசல் வழியாக உள்ளே வந்த அவரை வரவேற்று அழைத்துச் சென்ற அதிகாரிகள், சக்கரத்தாழ்வார் சந்நிதி, உடையவர் சந்நிதி, கருடாழ்வார் சந்நிதி, மூலவர் அரங்கநாதப் பெருமாள் சந்நிதி, தாயார் சந்நிதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.
சந்நிதிகளில் முதல்வர் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. வேறு யாகங்கள் பூஜைகள் எதற்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை. கோயில் பிராகாரத்தில் முதல்வர் செல்வதற்காக சென்னையில் இருந்து பேட்டரி கார் கொண்டு வரப்பட்டிருந்தது. சென்ற முறை கோயில் பிராகாரத்தில் முதல்வர் வலம் வந்தபோது, சில இடங்களில் நின்று, அமர்ந்து ஓய்வெடுத்துச் சென்றிருந்தார். எனவே இந்த முறை பேட்டரி கார் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.
மாலை 6.45க்கு சுவாமி தரிசனம் முடித்துக்கொண்டு, கிழக்கு வெள்ளை கோபுரம் வழியாக முதல்வர் வெளியே வந்தார். அங்கிருந்து விமான நிலையத்துக்குச் சென்றார்.
இன்று மாலையே முதல்வர் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


