ராமநாதபுரம், மே.1: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரையில் இருந்து ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள கடல் அட்டைகளை பிடித்துச் சென்று வீட்டில் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
68 வயதான தர்வீஸ் முகைதீன் என்பவர் மீனவர். இவர் தேவிபட்டினம் பெரியகடைத்தெருவைத் சேர்ந்தவர். இவரிடம் ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள கடல் அட்டைகள் இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று அவற்றை கைப்பற்றி, முகைதீனை கைது செய்தனர். தற்போது மீன்பிடித் தடைக்காலமாததால் வருமானத்துக்காக இந்த கடல் அட்டைகளை பிடித்ததாக விசாரணையில் முகைதீன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.