கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது வழக்கு : வழக்குரைஞர்கள் சாலை மறியல்
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை கைவிடக்கோரி மதுரை- மேலூர் சாலையில் இன்று வழக்குரைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை கைவிடக்கோரி மதுரை- மேலூர் சாலையில் இன்று வழக்குரைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கூடங்குளம் போராட்டக்காரர்கள் இருவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டிது மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டச் செயலர் லயனர் அந்தோணி ராஜ் தலைமையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் நஸ்ரேன், லூர்துசாமி இருவர் மீதும் குண்டர் தடுப்புக் காவலை ரத்து செய்ய வேண்டும், போராட்டக்காரர்கள் மீது பதிவாகியுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும், 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், அது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த சாலை மறியலின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...