கீழவளவு பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள் பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் வண்டிப்பாறை உள்ளிட்ட கனிமவள நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களிலும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான கிரானைட் கற்கள் வெட்டி திருடிச் செல்லப்பட்டது. இது தொடர்பாக பிஆர்பி அதிபர் பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மீது 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் குவாரிகள் தெற்குத் தெருவில் உள்ள கிரானைட் மெருகேற்றும் நிறுவனத்துக்கும் மதுரை மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. இந்த சீலை அகற்றுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நிதிபதி உத்தரவிட்டபோதிலும் மாவட்ட நிர்வாகம் தாக்கல் செய்த மேலுமுறையீட்டை ஏற்ற டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து,