மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொட்டாம்பட்டி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது பஸ் மோதி 3 பேர் பலி

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிர் இழந்தனர். விபத்தைப் பார்க்க வந்த ஒருவர்

News image
Updated On :16 நவம்பர் 2012, 4:45 am

தர்மராஜ்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிர் இழந்தனர். விபத்தைப் பார்க்க வந்த ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.

சேலத்தில் இருந்து கொட்டாம்பட்டி வழியாக திருப்பத்தூர் செல்லும் அரசு பஸ் ஒன்று பள்ளப்பட்டி அருகே வந்த போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், அரசு பஸ் நடத்துனர் தருமபுரியைச் சேர்ந்த முருகேசன் (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பஸ்ஸில் இருந்த  அடையாளம் தெரியாத, 55 வயது மதிக்கத்தக்க ஒரு பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் குமார் (45) உள்பட 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் பஸ்ஸின் ஒரு பக்கவாட்டுப் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது.

இந்த விபத்து சம்பவத்தைப் பார்க்க வந்த வலைச்சேரிப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (55) வேகமாக சாலையைக் கடந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.