தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

முக்கூடலில் மின்தடையை கண்டித்து கம்யூ. கட்சியினர் நூதனப் போராட்டம்

முக்கூடலில் 14 மணி நேரம் நீடிக்கும் மின்தடையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :23 நவம்பர் 2012, 12:05 pm

ஷேக் அப்துல்காதர்

முக்கூடலில் 14 மணி நேரம் நீடிக்கும் மின்தடையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 14 மணி நேரத்திற்கு அதிகமாக மின்தடை அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் குழந்தைகள், பெரியவர்கள், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கத்தை இழந்து அவதிப்படுகின்றனர். மின்தடை காரணமாக கிராம ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு்ள்ளது.

மின்தடையை கண்டித்து பாப்பாக்குடி வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் முக்கூடல் பஸ் நிலையம் அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் டிவி, மிக்ஸி, பேன் போன்ற மின்சாரத்தில் இயங்கும் சாதனங்களுக்கு மாலை அணிவித்து வைக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.