முக்கூடலில் மின்தடையை கண்டித்து கம்யூ. கட்சியினர் நூதனப் போராட்டம்
முக்கூடலில் 14 மணி நேரம் நீடிக்கும் மின்தடையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


முக்கூடலில் 14 மணி நேரம் நீடிக்கும் மின்தடையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 14 மணி நேரத்திற்கு அதிகமாக மின்தடை அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் குழந்தைகள், பெரியவர்கள், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கத்தை இழந்து அவதிப்படுகின்றனர். மின்தடை காரணமாக கிராம ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு்ள்ளது.
மின்தடையை கண்டித்து பாப்பாக்குடி வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் முக்கூடல் பஸ் நிலையம் அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் டிவி, மிக்ஸி, பேன் போன்ற மின்சாரத்தில் இயங்கும் சாதனங்களுக்கு மாலை அணிவித்து வைக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...