போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொது இடத்தில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்ததாக 2 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு

சிதம்பரம் நகரில் பொதுஇடத்தில் அனுமதியின்றி மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து டிஜிட்டல் பேனர் வைத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 8 பேர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

News image
Updated On :15 அக்டோபர் 2012, 1:12 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் பொதுஇடத்தில் அனுமதியின்றி மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து டிஜிட்டல் பேனர் வைத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 8 பேர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிதம்பரம் நகரில் மேலவீதி கஞ்சித்தொட்டி மற்றும் காந்திசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஊர்தி பயணம் நடத்துவது குறித்து டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் மெழுவர்த்தி வெளிச்சத்தில் கோப்புகளில் கையெழுத்திடுவது போன்ற படம் இடம் பெற்றிருந்தது. இதற்கு அதிமுகவினர் எதி்ர்ப்பு தெரிவித்தனர்.

இதனை அறிந்த நகர போலீஸார் திங்கள்கிழமை இரவு அந்த டிஜிட்டல் பேனர்களை அகற்றினர். மேலும் பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன் (சிதம்பரம்), ராமமூர்த்தி (விக்கிரவாண்டி), மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆனந்தன், மூசா, மாவட்டச் செயலாளர்கள் ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் ஆகிய 8 பேர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.