மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 85 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவைத் தேர்தல் ஆணையம் இலக்காகக் கொண்டுள்ளது என்பது குறித்து...

News image

கேரள மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் யு கேல்கர்

@Ceokerala

Updated On :23 மார்ச் 2026, 2:15 pm

இணையதளச் செய்திப் பிரிவு

வரவிருக்கும் கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 85 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவைத் தேர்தல் ஆணையம் இலக்காகக் கொண்டுள்ளது என கேரள மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் யு கேல்கர் தெரிவித்தார்.

தமிழகம், கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. அதன்படி, கேரளத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இதனையொட்டி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்காக, திருவனந்தபுரத்தில் உள்ள பத்திரிகை தகவல் பணியகத்தால் தயாரிக்கப்பட்ட 'ஓட்டறிவு' என்ற தேர்தல் வழிகாட்டி நூலின் வெளியீட்டு விழாவில் பேசிய கேரள மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் யு கேல்கர், “கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 85 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவைத் தேர்தல் ஆணையம் இலக்காகக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில், 75.60 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Kerala Chief Electoral Officer Ratan U Kelkar said that the Election Commission is targeting a voter turnout of over 85 percent in the Kerala Assembly elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.