6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

மேலூர், செப்., 04 : தமிழை நீதிமன்ற வழக்கு மொழியாக அறிவிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குரைஞர்கள் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:12 am

தர்மராஜ்

மேலூர், செப்., 04 : தமிழை நீதிமன்ற வழக்கு மொழியாக அறிவிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குரைஞர்கள் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 ஆண்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், தமிழ் மொழியை நீதிமன்ற வழக்கு மொழியாக அறிவிக்கக் கோரி வழக்குரைஞர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

நேற்று காலை 10 மணிக்குத் துவங்கிய 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை 10 மணிக்கு முடித்திருக்க வேண்டும். ஆனால், வழக்குரைஞர்கள் தங்களது உண்ணாவிரதத்தை முடிக்காமல், இன்றும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.