மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிரானைட் முறைகேடு : 3 நிறுவனங்கள் மீது கீழவளவு போலிஸ் வழக்கு

மேலூர், செப்., 08 : மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரசு நிலம், கண்மாய், காள்வாய், புறம்போக்கு நிலங்களில் கிரானைட் கற்கள் திருடப்பட்டதாக பிஆர்பி நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செ

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:17 am

தர்மராஜ்

மேலூர், செப்., 08 : மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரசு நிலம், கண்மாய், காள்வாய், புறம்போக்கு நிலங்களில் கிரானைட் கற்கள் திருடப்பட்டதாக பிஆர்பி நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கிரானைட் முறைகேடு தொடர்பாக 21க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ன.

இதைத் தொடர்ந்து கீழவளவு கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் அளித்துள்ள புகாரில் கீழவளவு பகுதியில் செயல்படும் ஆர்வி என்டர்பிரைசஸ் கிரானைட் நிறுவனம், தனக்கு ஒதுக்கப்பட்ட சர்வே எண் 257/2 என்ற இடத்தில் கிரானைட் கற்களை வெட்ட உரிமம் பெற்று அந்த இடத்தை விட்டுவிட்டு அரசுக்கு சொந்தமான இடத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இதேப்போன்று எம்எஸ் கிரானைட் நிறுவனம் சர்வே எண் 267/2 ல் அனுமதி பெற்றும், கோரமண்டல் கிரானைட் நிறுவனம் 264/ லும் கிரானைட் வெட்டி எடுக்க உரிமம் பெற்றுள்ளன.

ஆனால் இந்த நிறுவனங்கள் சட்ட விரோதமாக அரசுக்கு சொந்தமான பகுதிகளில் ஏராளமான கற்களை வெட்டித் திருடியுள்ளனர் என விஏஓ தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பேரில் கீழவளவு போலிஸார் இன்று அந்த 3 நிறுவனங்கள் மீதும் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.