மதுரை, மே.13: மதுரை ஆதீனம் மீட்புக்குழு மாநாடு இன்று மதுரையில் நடைபெற்றது.
இதில் வேளக்குறிச்சி ஆதீனம், நெல்லை கண்ணன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சைவ, சமயத் துறவிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
மதுரை ஆதீனத்திலிருந்து நித்தியானந்தாவை உடனடியாக வெளியேற்ற வேண்டும். புதிய ஆதீனத்தை தமிழகத்தின் மற்ற ஆதீன மடங்களை கலந்தாலோசித்து நியமிக்க வேண்டும். புதிய ஆதீனத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









