1984ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு ஒன்றில் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லியில் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய தில்லிப் பகுதியின் முக்கியச் சாலைகள் அனைத்தும், போராட்டக்காரர்களால் நிரம்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் வாயிலிலும், சோனியா காந்தி வீட்டு வாயிலிலும் ஏராளமான சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சஜ்ஜன் குமாரை குற்றமற்றவர் என்று விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இரண்டு நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










