மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தனியார் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர் நிறுவன வாகனம் மீது கல்வீச்சி

தம்மம்பட்டி அருகே தனியார் வெடிமருந்து தொழிற்சாலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர், தொழிற்சாலைக்குரிய

Updated On :11 மே 2013, 8:39 am

தம்மம்பட்டி அருகே தனியார் வெடிமருந்து தொழிற்சாலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர், தொழிற்சாலைக்குரிய வேன் மீது கல்வீசியதையடுத்து அவரை போலீசார் பிடித்துவைத்து விசாரித்து வருகின்றனர்.

தம்மம்பட்டி அருகே முருங்கப்பட்டியில் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இதில் தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் வேலைக்குச் சென்று வருகின்றனர். தொழிற்சாலையின் வேன் மூலம் தொழிலாளர்கள் தினந்தோறும் வேலைக்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் தம்மம்பட்டி அருகே நேருநகர் காலனியைச் சேர்ந்த பாண்டியன்(34), அண்மையில் அந்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டாராம்.

தொழிற்சாலை வேன், நேற்று இரவு தம்மம்பட்டிக்குள் வந்தபோது பாண்டியன், அந்தவேன் மீது கல் எடுத்து வீசனாராம். இதில் வேனின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து சந்தேகத்தின் பேரில் பாண்டியனிடம் விசாரணை செய்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.