திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மனைவி ஷர்மிளா. இவர்களுக்கு விஷ்ணுராம் என்ற மகன் உள்ளார். ஷர்மிளாவுக்கு சேர வேண்டிய சொத்துக்களை தர அவரது தந்தை மறுத்துவிட்டதால் திண்டுக்கல் மாவட்ட போலீசில் புகார் செய்தார்.ஆனால் போலீசார் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சென்னை வந்த 3 பேரும் சொத்து பிரச்சினையில் போலீசார், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தீக்குளிக்க போவதாக கூறி பெட்ரோல் பாட்டிலுடன் முதலமைச்சர் வீடு நோக்கி சென்றனர். போலீசார் 3 பேரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









