/

ஐபிஎல் சூதாட்டம் : ஹிந்தி நடிகர் விண்டூ தாரா சிங் கைது

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஹிந்தி நடிகர் விண்டூ தாரா சிங்கை மும்பை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

Updated On :21 மே 2013, 11:10 am

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஹிந்தி நடிகர் விண்டூ தாரா சிங்கை மும்பை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

குத்துச்சண்டை வீரர் தாரா சிங்கின் மகனும், ஹிந்தி திரைப்பட நடிகருமான விண்டூ தாரா சிங் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களுக்கும், வீரர்களுக்கும் இடையே ஒரு இடைத் தரகராக விண்டூ தாரா சிங் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.