மாநிலங்களவைத் தொகுதிக்கு பிரதமர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் பிறந்த தேதியில் திருத்தம் செய்ய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அசாம் மாநிலம் குவகாத்தி மாநிலங்களவைத் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பிரதமர், அதில், தனது வயதை 82 என்று பதிவு செய்திருந்தார். ஆனால், கடந்த முறை அவர் செய்த வேட்பு மனுவின் அடிப்படையில், அவருக்கு இப்போது வயது 80 தான் ஆகிறது. எனவே, இதில் சர்ச்சை எழுந்தது.
இதற்கிடையே தனது வேட்பு மனுவில் திருத்தம் செய்வதற்கான பிரமாணப் பத்திரத்தை பிரதமர் தாக்கல் செய்துள்ளார். அதில் தனது வயது 80 என குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!







