/

ராஜஸ்தானில் சிலிண்டர் வெடித்து விபத்து : 4 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாயினர்.

Updated On :21 மே 2013, 9:21 am

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாயினர்.

சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான வீட்டின் அருகில் இருந்த மற்றொரு வீட்டில், வெடிபொருட்கள் ஏராளமானவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டில் ஏற்பட்ட தீ மளமளவென்று அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியதால், ஒரு வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.