சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களின் வீடுகளில் சோதனை நடத்திய சிபிசிஐடி காவல்துறையினர், வீடுகளுக்கு சீல் வைத்துள்ளனர்.
வேப்பேரியில் உள்ள உத்தம் ஜெயின் என்பவரது வீட்டில் இன்று சோதனை நடத்திய சிபிசிஐடி காவல்துறையினர், சுமார் 3 லட்சம் ரொக்கம், 12 சிம்கார்டுகள், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். உத்தம் ஜெயின் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க தீவிர வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், கீழ்ப்பாக்கம் சஞ்சய் பாப்னா வீட்டில் இருந்து செல்போன், லேப்டாப், சூதாட்டம் தொடர்பான சில ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அயனாவரத்தில் உள்ள பிரசாந்த் வீடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









