/

கனத்த இதயத்தோடு காங்கிரஸில் இருந்து விலகுகிறேன் : கேசவ ராவ்

கனத்த இதயத்தோடு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஆந்திராவில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கேசவ ராவ் தெரிவித்துள்ளார்.

Updated On :1 ஜூன் 2013, 10:34 am

கனத்த இதயத்தோடு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஆந்திராவில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கேசவ ராவ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ள 72 வயதாகும் கேசவ ராவ், மாநில காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளவர். தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சியில் இணைகிறார்.

இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கேசவ ராவ், தான் கனத்த இதயத்தோடு தான் இந்த முடிவை எடுத்ததாகவும், கட்சி மீது தனக்கு எவ்வித வருத்தமோ, புகாரோ இல்லை என்றும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.