/

ஓரம்கட்டப்பட்டார் சீனிவாசன் : விரைவில் பதவி விலகுவார்?

பிசிசிஐ தலைவர் சீனிவாசனை பதவி விலகக் கோரி வந்த அழுத்தங்கள் தற்போது அதிகரித்துள்ள நிலையில், அவர் விரைவில் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News image
Updated On :1 ஜூன் 2013, 8:51 am

பிசிசிஐ தலைவர் சீனிவாசனை பதவி விலகக் கோரி வந்த அழுத்தங்கள் தற்போது அதிகரித்துள்ள நிலையில், அவர் விரைவில் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியில் இருந்து வந்த அழுத்தங்களுக்கு எல்லாம் அசராமல் இருந்த சீனிவாசன், தான் பதவி விலகப் போவதில்லை என்று உறுதியாக தெரிவித்திருந்தார்.

ஆனால், பிசிசிஐ தலைவருக்கு எதிராக நேற்று பிசிசிஐ பொருளாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் பதவி விலகியுள்ள நிலையில், 5 துணைத் தலைவர்களும், சீனிவாசன் பதவி விலகவில்லை எனில், இன்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

வேறு வழியே இல்லாமல், பிசிசிஐ உறுப்பினர்களாலேயே சீனிவாசன் ஓரம்கட்டப்பட்டுள்ள நிலையில், அவர் தனது பதவி விலகலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.