திருட்டுப் போன செல்பேசி எண்ணுக்கு, 150 முறை பேசியுள்ளார் தொழில் அதிபர் விக்ரம் அகர்வால்.
ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி சிபிசிஐடி காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் விக்ரம் அகர்வாலிடம் காவல்துறையினர் நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், அவர் ஒரே எண்ணுக்கு தொடர்பு கொண்டு 150 முறை பேசியுள்ளார். அந்த செல்பேசி எண், நெல்லை சங்கரன் கோவில் முகவரியில் வாங்கப்பட்டிருந்தது. சங்கரன்கோவில் சென்று, அந்த செல்பேசி எண்ணை வாங்கிய நபரிடம் விசாரித்ததில் செல்போன் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார்.
எனவே, ஒரு திருட்டுப் போன செல்பேசி எண்ணுக்கு, விக்ரம் அகர்வால் 150 முறை பேசியுள்ளது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், விக்ரம் அகர்வால், குருநாத் மெய்யப்பன், விண்டூ தாரா சிங் ஆகியோர் திருப்பதியில் சந்தித்துப் பேசியுள்ளதும் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவினரிடம் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

பாஜகவின் 'பி' டீம் திமுகதான்: அமைச்சர் அருண்ராஜ்

ஜூன் 20-ல் மீண்டும் தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம்!

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



