வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் பாஸ்கரன். இவர் நேற்று இரவு ஊர்க்காவல் படை வீரர் பிரபாகரனுடன் ரோந்து பணியில் சென்றிருந்தார்.
வியாசர்பாடி சி.கல்யாணபுரம் 2-வது தெருவில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வாலிபர்கள் சிலர் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்ததை கண்டனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவர்களை அங்கிருந்து கலைந்து போக சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும், ஊர்க்காவல் படை வீரர் பிரபாகரன் ஆகிய இருவரையும் சரமாரியாக உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் அங்கிருந்து ஓட்டம் பிடித்த பிரபாகரன் அருகில் இருந்த வியாசர்பாடி போலீஸ் நிலையத்துக்கு சென்று தகவலை கூறினார்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீஸார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.இச்சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளும் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

இது தெரியுமா? பிறந்தவுடன் குழந்தைகள் அழுவது ஏன்?
மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தமிழக அரசு தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!

தவெகவில் இணைந்தது ஏன்? சி. மகேந்திரன் விளக்கம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


