ஆத்தூர் அருகே சின்னப்புனல்வாசல் பகுதியில், தனியார் பள்ளிக்குச் சொந்தமான வகானம் ஒன்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.
இன்று காலை சுமார் 40 மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்தது. வாகனத்தை ஓட்டுநர் பாலகுமார் வேகமாக இயக்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. பேருந்து விபத்துக்குள்ளானதும் தப்பியோட முயன்ற பாலகுமாரை, பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
மாணவ, மாணவிகள் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







