சிவகங்கையில் பணியாற்றும் 2 வட்டார மருத்துவ அலுவலர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மருத்துவர்கள் சங்கரன், லட்சுமி காந்தன் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மருத்துவர் லட்சுமி காந்தனின் வீடு மதுரையிலும், சங்கரன் வீடு தேவகோட்டையிலும் உள்ளது. இவர்களில் லட்சுமி காந்தன் மானாமதுரையிலும், சங்கரன் திருவாடானையிலும் தனியாக கிளினிக் நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது வந்துள்ள புகாரினைத் தொடர்ந்து இந்த ஆய்வு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








