ஆலப்புழாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதில் நீரிழ் மூழ்கி பலியாயினர்.
விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான சாகர் (30) - எலிசிட்டி நாகமணி (26)ஆகியோர் ஆலப்புழாவுக்கு தங்களது தேனிலவைக் கொண்டாட வந்திருந்தனர்.
ஆலப்புழா படகு குழாமில் செவ்வாயன்று மாலை 3 மணியளவில் அவர்கள் பயணித்த படகு காற்று மற்றும் பயங்கர மழை காரணமாக தண்ணீரில் மூழ்கியதில், இருவரும் உயிரிழந்தனர். படகு ஓட்டுநரும், உதவியாளரும் நீந்தி பத்திரமாக கரை சேர்ந்தனர்.
இது குறித்து தகவல் தெரிந்து மீட்புப் பணிகள் நடந்ததை அடுத்து, மாலை 5.30 மணியளவில் நாகமணியின் உடல் மீட்கப்பட்டது. சாகரின் உடல் இதுவரை கிடைக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







