முன்னாள் அமைச்சா் உபயதுல்லா பிறந்த நாள் விழா
தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா 85-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, புகழ்மலா் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா பிறந்த நாள் விழாவில் புகழ் மலரை திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட திருச்சி தமிழ் இலக்கியக் கழகம் அருள்தந்தை அமுதன் அடிகளாா், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ம. இராசேந்திரன். உடன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை.சந்திரசேகரன் உள்ளிட்டோா்.









