சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மத்திய அரசு தெலுங்கானா விவகாரத்தை சரியாக கையாளவில்லை: அத்வானி

இந்திய எல்லைப் பகுதியான பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏ.கே. அந்தோணி இரு

Updated On :11 ஆகஸ்ட் 2013, 4:09 pm IST

இந்திய எல்லைப் பகுதியான பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏ.கே. அந்தோணி இரு அவைகளிலும்  அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.  அதில், பாகிஸ்தான் ராணுவ சீருடையில் வந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர் என தெரிவித்திருந்தார். பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தினர்தான் இந்த தாக்குதலை நடத்தினர் என்று கூறினார். இது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கூறுகையில், அந்தோணியின் கருத்துகளால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சரி செய்ய முடியாத களங்கம் ஏற்பட்டு விட்டது.மேலும், அரசு தெலுங்கானா விவகாரத்தை சரியாக கையாளவில்லை.இதன் காரணமாகவே நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.