கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

திரிணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜிஅமலாக்கத் துறையில் ஆஜர்!

அபிஷேக் பானர்ஜி அமலாக்கத்துறை முன்பு ஆஜரானது பற்றி..

News image

அபிஷேக் பானர்ஜி - file photo

Updated On :15 ஜூன் 2026, 11:59 am IST

தொடக்கப்பள்ளி, வேலைவாய்ப்பு மோசடி வழக்கு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, அமலாக்கத்துறை முன்பு ஜூன் 15 (இன்று) ஆஜரானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி விசாரணையில் விடுக்கப்பட்ட அழைப்பாணையைத் தொடர்ந்து அபிஷேக் பானர்ஜி இன்று காலை 11 மணியளவில் அமலாக்கத் துறையின் சிஜிஓ வளாக அலுவலகத்தை வந்தடைந்தார்.

இதுதொடர்பாக மூத்த அமலாக்கத்துறை அதிகாரி கூறுகையில்,

விசாரணையாளர்கள் அபிஷேக் பானர்ஜியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வார்கள், மோசடி மூலம் கிடைத்ததாகக் கூறப்படும் வருமானத்தைக் கண்டறிய நிதி ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களைக் கொண்டு அவரிடம் விசாரணை நடத்தப்படும்.

நிதிகளை யார் கையாண்டார்கள், அவற்றின் கணக்குகள், நிறுவனங்களுக்கு இடையே எவ்வாறு பரிமாறப்பட்டன, மேலும் இந்தப் பரிவர்த்தனைகளின் மூலத்தை மறைப்பதற்காக, பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனவா என்பவை ஆராய்வோம்.

மேலும், முந்தைய சமர்ப்பிப்புகளுக்கும், சோதனைகளின்போது மீட்கப்பட்ட புதிய ஆதாரங்களுக்கும் இடையே காணப்பட்ட முரண்பாடுகள் குறித்தும் விசாரணை அமைப்பு விளக்கங்களைக் கோரும்.

தடயவியல் பகுப்பாய்வின்போது சுட்டிக்காட்டப்பட்ட இடைத்தரகர்கள், பயனாளி நிறுவனங்களின் பங்கு குறித்தும் இந்த விசாரணையில் அடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பான ஆவணங்களில் திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கையொப்பங்களைப் போலியாகப் போட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து மேற்கு வங்க சி.ஐ.டி.யால் இரண்டு கட்டங்களாக விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trinamool Congress leader Abhishek Banerjee appeared before the Enforcement Directorate here on Monday in connection with the alleged school jobs scam case, an official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.