சென்னை திருவல்லிக்கேணியில் மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவல்லிக்கேணி ஹனுமந்த்புரம் வி.ஆர். பிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் மணிமாறன் (30). இவர் திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். மணிமாறன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கமாம்.இந்நிலையில் கடந்த சில நாள்களாக மணிமாறன் வேலைக்கு செல்லாமல் மது அருந்திக் கொண்டு ஊதாரித்தனமாக சுற்றித் திரிந்தாராம். இதை அவர் குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை கண்டித்தனராம்.இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மணிமாறன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்

ஐரோப்பிய யூனியனில் உக்ரைன், மால்டோவா நாடுகளைச் சோ்க்க நாளை முதல் பேச்சுவாா்த்தை






