தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கார் நிறுத்துமிடத்தை விற்பனை செய்யக் கூடாது : மும்பை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

குடியிருப்பு வளாகத்தில் வீடு வாங்குவோரிடம், கார் நிறுத்துமிடத்துக்காக தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மத்திய மும்பை மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 7:53 am

குடியிருப்பு வளாகத்தில் வீடு வாங்குவோரிடம், கார் நிறுத்துமிடத்துக்காக தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மத்திய மும்பை மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

சுரேஷ் மேஹ்தா என்பவர், கார் நிறுத்துமிடத்துக்காக பணம் வசூலித்தது குறித்து தொடர்ப்பட்ட மனுவை விசாரித்த தீர்ப்பாயம், கார் நிறுத்துமிடத்துக்காக, வீடு வாங்கியவர்களிடம் தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், அவ்வாறு வசூலித்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

மேலும், சுரேஷ் மேஹ்தாவுக்கு அவர் செலுத்திய ரூ.50000த்தை திருப்பி அளிக்கவும், ரூ.20,000 ஐ அபராதமாக செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவில், கார் நிறுத்துமிடம் என்பது ஒரு பொதுவான பகுதி. அதனை குடியிருப்பை கட்டும் நிறுவனத்தார் விற்பனை செய்து அதற்காக பணத்தை பெறக் கூடாது என்று கூறியுள்ளது.

குடியிருப்பு வளாகத்தில் வீடுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், கார் நிறுத்துமிடங்களை விற்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.