தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

வேலூர் : திடீரென தீப்பற்றிய கார்; உயிர் தப்பிய குடும்பத்தினர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தின் மீது செவ்வாய்க்கிழமை இரவு வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்த இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயர் தப்பினர்.

Updated On :11 செப்டம்பர் 2013, 7:34 am

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தின் மீது செவ்வாய்க்கிழமை இரவு வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்த இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயர் தப்பினர்.

ஓசூரைச் சேர்ந்த தனஞ்செயன், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காரில் வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நேரிட்டுள்ளது.

காரில் திடீரென புகை வருவதைப் பார்த்த தனஞ்செயன், உடனடியாக காரில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே குதித்தார். அவர் வெளியேறிய சிறிது நேரத்திலேயே, கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து காரை அப்புறப்படுத்தினர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.