அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

வீட்டுக்கு முன் மது குடித்த இளைஞர்களைத் தட்டிக்கேட்ட பெண் மீது தாக்குதல்

அருப்புக்கோட்டையில் வீட்டிற்கு முன் மது குடித்தவர்களை தட்டிக் கேட்ட பெண்ணைத் தாக்கி மூக்கினை உடைத்த இளைஞர்கள் 4 பேரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

Updated On :4 ஏப்ரல் 2013, 10:31 am

அருப்புக்கோட்டையில் வீட்டிற்கு முன் மது குடித்தவர்களை தட்டிக் கேட்ட பெண்ணைத் தாக்கி மூக்கினை உடைத்த இளைஞர்கள் 4 பேரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

அருப்புக்கோட்டை கீரைப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சந்திரன்(35). இவரது வீட்டிற்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் உள்ளிட்ட அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 4 பேர் வரையில் மது குடித்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக சந்திரன் மனைவி என் வீட்டிற்கு முன்பு உட்கார்ந்து மது குடிக்கக் கூடாது என தட்டிக் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் 4 பேரும் கண்டபடி பேசியுள்ளனர். அதோடு, அவரை தாக்கி மூக்குடைத்ததில் படுகாயம் அடைந்தார். இது குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் சந்திரன் புகார் செய்தார். உடனே போலீஸார் பெண்ணின் மூக்கினை உடைத்த இளைஞர்கள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். உடனே மூக்கில் காயம் அடைந்த பெண்ணுக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.